Tuesday, February 12, 2013

ஓட்டுனர்களுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...!



ஓட்டுனர்களுக்கு தெரிந்த விஷயம்; 

தெரியாத உண்மை...!

     வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை 

குறித்து அறிந்திருப்பதில்லை. இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் 

அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது:

* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை 

எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.


* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை 


எரிய விடுவது தவறு. அபாயகரமான   அல்லது வாகனம் பழுதாகி 

நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் 

செல்லும்போதோ எரியவிட வேண்டும்.


* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, 


அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.


* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு 


போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் 

என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக 

போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.


* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், 


அதை ஒரு தடுப்புச் சுவராக கருத வேண்டும்.


* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் 


பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என 

பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் 

பரிசோதனை செய்வது நல்லது.


* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் 


உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு 

எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர 

நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க 

வேண்டும்.


* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு 


விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.


* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு 


"இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, 

மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் 

நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் 

செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து 

திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.


* கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது

சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க 

வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் 

நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.


* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே 


வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு 

ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் 

இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி வராது. இது வாகனங்களின் கார்பன் 

டை ஆக்சைடை அதிகம் "அப்சர்வ்' செய்கிறது. விலங்குகளும் இவற்றை 

உண்பதில்லை.


* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 


என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத 

இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் 

"சிம்கார்டு'  இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு 

பயன்படுத்தலாம்.மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் 

இருந்து நம்மை பாதுகாக்கும்.


No comments:

Post a Comment